Sunday, October 4, 2015

காதல் - 1

மனநிறைவுடன் வலம் வந்தாலும்
மனதின் மூலையில் சிருதவிப்பு..
மறுத்துவிட மனது கணக்கிட்டாலும் 
மௌனங்களே மொழியாய் (பாஷையாய்)..
கண்களால் பேசியே தினம் 
வதைத்திடும் பாவை..
கனவாய் இருந்தால் மனதில்
குழப்பம் எது??
நனவாய் இருப்பதால்
நிம்மதி அழியுமோ?
பார்க்கும் பார்வையில் (கண்ணில்)
மூடும் இமையில்
உயிர் தரும் மூச்சில்
உரிமை கொண்டு ஊடல் கொண்டு..
கண்கள் பனிக்க 
காணும் பாவையே..
என்னை விடு.... எண்ணவும் விடு..
என் நினைவுகள் இனிக்குது..
நிலவும் உண்மைகளோ மறுக்கிறது..
இன்பமான குழப்பம்..
இனிய புத்தாண்டில் துவக்கம்..

1-ஜனவரி -1999

No comments:

Post a Comment