இனிதே கழிந்தது
இன்றைய
பொழுது..
களிப்பாய்
இருக்குது
காணும்
கனவுகள்..
புதிதாய்
இருந்தது
பார்த்த
செய்கைகள்..
புதிராய்
இருந்தது
பாவையின்
மனது..
மனதைத் திறந்திட
திறவுகோல் ஒன்று
மளமளவென வார்த்தை வந்தது..
மனதின் குழப்பம்
தெளிவாய் தெரிந்தது
உதவிக்கு வரவே
மனதில் எண்ணம்..
ஏற்கப்படுமா?
No comments:
Post a Comment