Monday, October 12, 2015

நாள் 3


என்றுமில்லா சந்தோசம்
எந்தன் மனதில்...
இருந்தாலும் தயக்கம்
பிறருடன் பகிர..
உள்ளம் கலந்தது
உறவும் பூத்தது..
     பார்த்த நாள்முதல்
     மனதில் தேங்கிய
     நினைவுகளுக்கு விடுதலை..
     சிறகு இல்லாமல்
     வானில் பறப்பதாய்
     உணர்வு..
ராகமில்லா பாடலுக்கு
ராகமாக..
காட்டு மூங்கிலிலே
நாதமாக..
பாலை நிலத்திற்க்கொரு
நீரூற்றாய்....
     தயக்கங்கள் என்றுமே
     பாதை காட்டாது..
     சலனங்கள் மட்டுமே
     சங்கீதம் ஆகாது..
சுதியோடு லயம் சேர்ந்து
ஒன்றான நெஞ்சம்..
இனி இந்த காற்றுக்கு

தடை ஏது?

No comments:

Post a Comment