என்றுமில்லா சந்தோசம் எந்தன் மனதில்..
ஏனோ தயக்கம் எல்லோருடன் பகிர..
உள்ளம் கவர்ந்து உறவும் பூத்தது..
பார்த்த நாள் முதல் மனதில் தேங்கிய
நினைவுகளுக்கு விடுதலை..
சிறகு இல்லாமல்
வானவெளியில் பறப்பது போன்ற உணர்வு..
ராகமில்லா பாடல்களுக்கு ராகமா..
காட்டு மூங்கிலிலே நீ நாதமானாய்..
பாலை நிலதிற்க்கொரு நீரூற்றாய்..
தயக்கங்கள் என்றுமே பாதை காட்டாது..
சலனங்கள் மட்டுமே சங்கீதம் ஆகாது..
சுதியோடு லயம் சேர்ந்து ஒன்றான நெஞ்சம்..
இனி..
இந்த காற்றுக்கு தடை ஏது?
காலமே
இக்காதலுக்கு நல்விடை கூறு..
No comments:
Post a Comment