Monday, July 18, 2016

05.01.1999



என் நினைவுகள் சங்கிலியாய்
நீண்டுகொண்டே இருக்கின்றன..
முடிவில்லா வானத்தின் எல்லையைத் தேடி..
இதோ.. என்  பயணம்..
கற்பனை சிறகுகளை என்று கழற்றி வைத்தேன்...
இரு கண்கொண்டு என்னை சுற்றி
நான் பார்த்தேன்..
எத்தனை விதமான பிறவிகள்..
எத்தனை விதமான மனிதர்கள்..
எங்கும் எதிலும் தேடல்களே..
என் தேடலில் ஒரு பகுதி முடிவுக்கு வந்தது..
உன்னை பார்த்த பின்பு....

சுற்றிவரும் உன் சின்ன கண்கள்..
என்னை கட்டிப்போட்டது இன்று..
கொட்டிக்கொண்டிருக்கும் பாலருவியில்
குளித்தெழுந்தது போல ஒரு புத்துணர்வு..
சொல்லிச்சொல்லி பார்த்தேன் உன் பெயரை..
நெஞ்சில் புது அர்த்தங்களாய். பழைய நினைவுகள்..
சிறகில்ல இப்பயணம் சிரமமே இல்லை..

உன்னாலே..

No comments:

Post a Comment