Monday, July 18, 2016

07.01.1999



இனிமையான நினைவுகளாலே
என் வாழ்க்கையின் எல்லை விரிகிறது..
உன்னாலே என்
கற்பனையின் எல்லையும் விரிகிறது..
பனிக்கால மார்கழியின் குளிருக்கு இதமாக
என் நெஞ்சத்தில் நீ..
முக்கடலும் முத்தமிட்டுக்கொள்ளும்
கன்னியாகுமரி...
என் நெஞ்சில் அழியாத பெயரன்றோ..
முத்தமிழை நான் சுவைத்து ருசித்தாலும்..
உன் நினைவின் சுவையால் தான்
பிறந்திடுது கவிதை..
திக்கெட்டும் சுற்றிவரும் காற்றும் கூட
உன் பெயரை சொல்லுவதால் தான்
என்னுள்ளே செல்கிறது..
சுட்டெரிக்கும் சூரியனும் உன் பெயரை சொல்ல
மேகத்தில் முகம் மறைக்கும்..
மென்கதிரை மெல்ல விடும்..

சொல்லிருக்கும்...
மொழியிருக்கும்..- அதில்
நீயின்றி சுவை எப்படி இருக்கும்..

No comments:

Post a Comment