Monday, July 18, 2016

13.01.1999



கையாலே வரையாத உயிரோவியமே..
கைத்திறனை காட்டி நீ
வரைந்த ஓவியமோ நுட்பமான அழகு..
உன் பொறுமை குணத்தோடு
மனதிறனும் சேர்ந்து கற்பனையால் வந்த
அந்த ஓவியம் வெகுநேர்த்தி..
என் நெஞ்சின் பாராட்டை
பெற்றுக்கொள்ள வாராயோ..
உயிரோவியமே நீ எனக்கு என்றானபின்
மற்றதெல்லாம் உன்போல அழகில்லை..
அழகியே..
உன்னை பார்க்க முடியாமல்
என் பார்வையால் என்ன பயன்..?
தேன்மொழி சொல்லெடுத்து
என் மனதை வருடிவிடு..
தேன் குளத்தில் விழுந்துவிட்ட தேனியைப்போல
நானும் உன்னாலே
இன்று காதல் சாகரத்தில்
கரைசேர்வேன் நீ வந்தால்..
இன்றேல்..
உலகத்தில் நானிருப்பேன்..
இந்த உலகத்தில் என் நாள் மட்டும்..
என்றென்றும் உன்

நினைவில்..

No comments:

Post a Comment