கனவுகள்
மனதின் நினைவுகள்....
நெஞ்சத்து ஆசைகளின் ஆட்சிக் களமன்றோ..
கனவின் களங்கள்
காலங்களை பொருத்து
மாறிக்கொண்டே அல்லவா இருக்கிறது..
எந்தன் கனவு இன்று உன்னை சுற்றியே..
ஒவ்வொரு செல்லும் உன் பேர் சொல்லும்..
என் மனம் இப்பொழுது
மிக அமைதியாக உள்ளது – உன்னாலே..
என் கனவுகளோ
மிக இனிமையாக உள்ளது – உன்னாலே..
என் எழுதுகோல் எழுதும் ஒவ்வொரு
எழுத்தும் நீயே..
கனவின் ஆட்சியில்
என் இதய சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் தேவியே..
நினைவின் போது
என்னை வந்து அணைத்துவிடு..
உன் இதழாலே
என் இதழில் ஒரு நீண்ட கவிதை
வரைந்து விடு..
No comments:
Post a Comment