Monday, July 18, 2016

08.01.1999



கனவுகள்
மனதின் நினைவுகள்....
நெஞ்சத்து ஆசைகளின் ஆட்சிக் களமன்றோ..
கனவின் களங்கள்
காலங்களை பொருத்து
மாறிக்கொண்டே அல்லவா இருக்கிறது..

எந்தன் கனவு இன்று உன்னை சுற்றியே..
ஒவ்வொரு செல்லும் உன் பேர் சொல்லும்..
என் மனம் இப்பொழுது
மிக அமைதியாக உள்ளது – உன்னாலே..
என் கனவுகளோ
மிக இனிமையாக உள்ளது – உன்னாலே..
என் எழுதுகோல் எழுதும் ஒவ்வொரு
எழுத்தும் நீயே..
கனவின் ஆட்சியில்
என் இதய சிம்மாசனத்தில்
அமர்ந்திருக்கும் தேவியே..
நினைவின் போது
என்னை வந்து அணைத்துவிடு..
உன் இதழாலே
என் இதழில் ஒரு நீண்ட கவிதை

வரைந்து விடு..

No comments:

Post a Comment