Monday, July 18, 2016

06.01.1999



வெண்மேகத்தில் மிதந்துவரும்
வெண்ணிலவுப் பெண்ணே..
என்னை பிடிக்காதா....?
என்று
வானம் உன்னை கேட்டால்
உன் மனதின் நிலை என்ன...??
என் மனமோ துடிக்கிறது..
இந்த கேள்வியால்..
உன் நினைவுகள் வாட்டிய
பழங்கதைகள்
என் நெஞ்சை இன்னும் நீங்கவில்லை..
கண்கள் கலங்கிடும் நிலையின்று..
ஆனால் கேட்டது நீயன்றோ..
அதனால் தேற்றிக்கொண்டேன்..என் நெஞ்சை..
உயிரே உயிரை வெறுத்திடுமா?
உன்னை மனதும் மறுத்திடுமா..?
என்றும் கண்ணில் நீயம்மா..

பார்த்தே அன்றே என்னுயிர் உன்னோடு..
நான் உனக்கு சொல்லாததால் தான் இந்த கேள்வி..
தெரிந்து கொள்..
நீயின்றி இனி இப்புவியில் எனக்கு
வேறு இன்பம் ஏது..?

No comments:

Post a Comment