Monday, July 18, 2016

11.01.1999



என் இனிய கள்ளியே..
எப்படி திருடினாய் என்னை...?
எத்தனையோ மங்கையரிடம் தப்பி வந்த என்னை..
நீ மட்டும் எப்படி திருடினாய்..?

பார்த்த அன்றே
உன் பார்வையால் திருடினாய்..!
பேச துவங்கியதும்
உன் வார்த்தையால் திருடினாய்..!
நாட்கள் செல்ல செல்ல
என் இதயத்தை பிடிங்கினாய்..
இப்பொழுது என் முழுமையையும்
நீ எப்படியோ திருடிவிட்டாய்..
நான் எப்படி உன்னிடம் என் மனதை
திருட்டுக்கொடுத்தேன்...?
கண் பார்வை...
இதழ் சிரிப்பு..
மெய் அன்பு கொண்டு நீ
என்னை திருடி விட்டாய்..
கள்ளியே..
என் இனிய கள்ளியே..
நான் மகிழ்கிறேன்..
உன்னிடம் என்னை இழந்ததற்கு..
வாழ்வின் எல்லை வரை
கூட வர ஒரு அன்பை நான் விரும்பினேன்..
இன்று உன்னாலே நிச்சயம்
அதை அடைவேன்..
அன்பே..
உன்னை நான் வாழ்வு முழுவதும்

ஆராதிப்பேன்..

No comments:

Post a Comment