என்ன எழுதுவது.....??
விரிந்து பரந்த ஆகாயத்தையா..
விழுந்து கிடக்கம் பூமியையா..
தலை களைந்து கிடக்கும் காடுகளையா..
நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் மலைகளையா..
சலசலத்து ஓடும் நதிகளையா..
சங்கீதம் பாடும் பரவைகளையா..
கவிதை பாடும் பூக்களையா..
கண் சிமிட்டும் வின்மீன்களையா..
கள்ளமின்றி சிரிக்கும் குழந்தையையா..
காதல் சொன்ன உன்னையா..
நான் சிறகு இல்லாமலேயே வானில்
மகிழ்ச்சியோட பறக்கிறேன்..
உன் அழகிய கண்கள்..
உன் செவ்விதழ்கள்..
சங்கு கழுத்து..
பிறை நெற்றி..
பூச்சூடும் கருன்கூந்தல்..
மெல்லிய கைவிரல்கள்..
பஞ்சுப் பாதங்கள்..
நான் எதை எழுதுவது..
பார்க்கும் பொருள் எல்லாம்
கேட்கும் மொழி எல்லாம்
சுவாசிக்கும் மூச்சி எல்லாம்
பேசும் வார்த்தை எல்லாம்
எல்லாமே நீயாக இருப்பதால்..
நான் எதை எழுதினாலும் அது
நீயன்றோ...
No comments:
Post a Comment