Monday, July 18, 2016

12.01.1999



பார்த்த விழி மூடவில்லை..
பால்வடியும் உன் மோகமோ
என் பார்வையிலே மறையவில்லை..
என் விழியில் கலந்துவிட்டாய்
இன்னுயிரே நீதான்..
உன் மடியில் தலை வைத்து
கண்ணுறங்கும் நாளெதுவோ..
நேரினிலே பார்க்க முடியாதோ என்ற
துன்பம் உன்னாலே விலகியது..
புகைப்படம் பார்த்துக்கொண்டே
பசி தூக்கம் நான் மறந்தேன்..
கண்மணியே இருவருமே களிப்போடு
கலந்திருக்கும் நாள் விரைந்து வந்திடுமே..
தூக்கங்கள் தொலைகிறது உன்னை
நான் நினைக்கையிலே..
துயரங்களும் விலகியது
உன் முகத்தை நினைத்தாலே..
தூக்கம் தொலைந்ததலே துயரங்கள் ஏதுமில்லை..
நன்னாள் வரும்
ஒரு பொன்னாள் வரும்
எந்நாளும் பிரிவில்லாத

மணநாளும் விரைந்து வரும்..

No comments:

Post a Comment