Wednesday, September 21, 2016

15.01.1999


இதோ..
என் கவிதை உனக்காக..
பூவே நீ தூரத்தில் இருந்தாலும்
உன் வாசம் என்னோடு..
அதோ சூரியன் எழுகிறது
நானும் எழுகிறேன் உன் நினைவோடு..
அந்தியில் சூரியன் விழும்போது
நானும் உன் நினைவாலே..
குளிர்நிலவே உன் பார்வையில்
மழைத்துளி பட்ட சிறுமலராக
நான் சிலிர்த்து போகிறேன்..
என் காதல் தேவதையே..
அதோ கல்லறையில் உறங்கும்
உலகின் காதல் தேவதை டயானா வாழ்த்துகிறாள்..
இந்த உலகின் பொதுமொழியாகிய
அன்பானவளே..
நீ பார்க்க.. நான் பார்க்க..
நீ நினைக்க... நான் நினைக்க
நீ இன்று  நானாக..
நானின்று நீயாக..
நாமாக எப்போது..?
அந்த வானவெளி வைரமீன்கள் எல்லாம்
உன்னைக்கண்டு கண் சிமிட்டிடும்..
உன்னோடு கூட பிறக்கவில்லையே என்று..
மலர்களும் உன்னை பார்த்து பொறாமை கொள்ளும்..
உன்னைப்போல் வாடாமல் இருக்க முடியவில்லையே என்று..

நிலவே உனக்காக துடிக்கும் வானம் நானடி...

No comments:

Post a Comment