Wednesday, September 21, 2016

25.01.1999


வானத்து வெண்ணிலவு
வெட்கம் வரும்போதெல்லாம்
மெகா முக்காட்டில் தன் முகத்தை
மறைத்துக்கொள்வாள்..
தென் சிந்தும் நறுமலர்கள் ஒரு போதும் தேடாது...
தேடிவரும் வண்டினமே...
பச்சை பசும்புல்வெளியும்
பரந்திருக்கும் காடுகளும்
தென்றல் தழுவிச்செல்ல
ஒருபோதும் மறுப்பதில்லை..
கருமேகம் திரண்டு வரும்..
குளிர் காற்று வந்துலாவும்
சில்லென்ற மழைத்துளிகள்
சிந்து பாடி பூமி வரும்.
அதை பார்க்க ஆடாது இருந்திடுமா?
அழகிய மயிற்கூட்டம்..
உயர்ந்து நிற்கும் மலைமுகடு..
முத்தமிடும் மேகங்கள்..
ஆற்றுப்பெண் நடந்தாலும்
சுழல் கொண்டு ஓடினாலும்
ஆர்ப்பரித்து அருவியாகி
ஆவி பறக்க விழுந்தாலும்..
அழகென்ன..
சின்னவிழி பார்வையிலே..
சிறைபடும் இனிமையென்ன..
இயற்கை எல்லாம் ரசிப்பதற்கே..
இன்னுயிரே..உன்னைப்போல்
கொஞ்சிப்பேசும் கோகிலமே..

வந்து உயிர் கலப்பதென்னாள்

No comments:

Post a Comment