Wednesday, September 21, 2016

20.01.1999


இன்று காலையிலே என் வானத்தின் நிலவை
நான் பார்க்கவில்லை.
இதனாலோ.. சிறு வேற்றுமை நண்பனுடன்..
நிலவும் இந்த வானத்தை பார்க்க முடியவில்லை..
அதனாலே நிலவுக்கு வான் மீது
சிறு ஊடல்..
நிலவே.. நீ வானத்துடன் ஊடல் கொண்டாலும்...
அது வானத்தை பிரிய முடியாது..
அன்பே.. உன்போன்ற பூவுக்கு
கோபம் வரலாமா..?
நேசம் கொண்ட விழிகள் நான்கும்
பார்வையால் பேச முடியாமல் போனால்...??
உன் ஊடல் எனக்கு சிரிப்பை தான் தந்தது..
அதுவும் என்மீது என்பதாலே
மனதில் மகிழ்ச்சி தான் பொங்கியது..
ஊடல் கொண்ட பூவே..
இதோ.. தென்றலாக வருகிறேன்..
உன்னை மார்போடு சேர்த்து அணைத்து
தழுவிக்கொள்ள..
மனதெல்லாம் நிறைந்தவளே..

மறுப்பேதும் உண்டா..

No comments:

Post a Comment