Wednesday, September 21, 2016

22.01.1999


இனியவளே..
என் நினைவுகள் என்னை ஆளும்
நிமிடங்கள் மிகக்குறைவு..
எப்படி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கினாய்..
என்னை வேன்றுமென்ற என்னவளே..
என்றோ நான் என்னை உனக்கு தந்துவிட்டேனே..
மண் கலந்த நீராக உன் மனதோடு
நான் என்றோ கலந்து விட்டேன்..
கண்ணே..
இமையாக நானிருக்கிறேன்..
தேனினிமை தேவதையே..
உன் சொல்லினிமை, மொழியினிமை
உன்னை பார்ப்பதே இனிமை..
சுற்றிவரும் சிறுவிழியால்
என் மனதை அலையவிட்டாய்..
உன் பார்வையாலே எனை அணைத்து
பரிவுடனே தாலாட்டுகிராய்..
அன்பே..
உன் மடியில் தலைவைத்து
எனை மறந்து நானுறங்க..
உலகத்தின் இன்பமெல்லாம்
அள்ளி அள்ளி நீ வழங்க என்று வருவாய்..
என்னுயிரே..
காத்திருக்கும் நாளெல்லாம்

கண்ணுறக்கம் தொலைக்குதடி...

No comments:

Post a Comment