Wednesday, September 21, 2016

21.01.1999


எவ்வளவு இனிமையாக இருந்தது
இன்று நீ சொன்ன அந்த வார்த்தைகள்..
இனிய இசையைப்போல அல்லவா
in காதில் ஒலித்தது..
எத்தனை அழகாக இருந்தது
நீ இன்று வெட்கப்பட்டு பார்த்த
அந்த மோகப் பார்வை..
அன்பே.. இன்று முழுமையும் நான்
நனவுலகில் இல்லை..
கனவு வானில் காதல் தேசத்தில்
உன்னோட கூட தனித்து இனித்து இருந்தேனடி..
பூவே..
இன்னும் ஏதேனும் குழப்பமா உன் மனதில்..
விட்டுவிடடி என்னவளே..
உனக்கெனவே நான் இருக்கிறேனடி அமுதே..
பூவுக்கும் வாசமாய் வாசம் செய்யும் இனியவளே..
உன் உயிரில் வாசம் செய்யும்
என்னுயிரும் நீதானே..
தினமும் உன் கண்ணில் கவிதைகளை வாசிக்கிறேன்..
நானோ உன்னாலேயே சுவாசிக்கிறேன்..
அன்பே..

உன் இதழின் கவிதையை எப்போது எனக்கு தருவாய்..?

No comments:

Post a Comment