Wednesday, September 21, 2016

14.01.1999



பௌர்ணமியின் பால் நிலவா..
பாற்கடலின் நல்முத்தா..
நான் பார்த்தேன்
கண்களால் பருகினேன்
அழகின் பகல்நிலவே உன்னை..
கருங்கூந்தல் அது காதோடு வந்துறாச
காதிலே உன் ஜிமிக்கி சந்தம் பாட...
எனை மறந்தே நான் பார்த்தேன்..
என் இமையின் துடிப்பும் நின்றது..
இதயத்திலோ ஓரினிய அலை..
கடைக்கண் பார்வையிலே வந்த
உன் புன்னகையில் நான் மறந்தேன் பூவுலகை..
உன் கூந்தலில் சூடியிருக்கும் சிறு பூவாய் நான்..
உன் கால் கொலுசு இசைபாட..
உன் கைவளையல் கவி பாட..
உன் காதின் லோலாக்கு கண்சிமிட்ட
உன் மூக்குத்தி எனை குத்தி இழுக்குதடி..
என்னுயிரே..
உன் அழகெல்லாம் அள்ளிப்பருக
ஆவலோடு நானிருக்க..
உன் சேலையோடு என்னையும் சேர்த்து
கட்டி சென்றாயோ..
பாசத்தோடு என்னை வந்து

சேர்த்து அணைப்பாயோ..

No comments:

Post a Comment