Wednesday, September 21, 2016

19.01.1999


எழுதுகோல் கொண்டு
நான் எழுத நினைப்பது எல்லாம்
உன்னையே...
எழுதுகோல் எடுக்கையிலே நான் மறப்பது
என்னையே...
இரவின் வானத்தைப் பார்க்கையில்
உன் முகமே..
பகலில் பூக்களை பார்க்கையில்
உன் முகமே...
சிவந்த வானம் தினம் பார்க்கையில்
உன் வெட்க முகம்..
வசந்தகால தென்றல் என்னை தழுவையிலே
உன் இனிமை....
உன் சுவாசத்தால் நான் உயிர் வாழ்கிறேன்..
வாடாத மலர்முகம் வாழும் வரை
என்றென்றும் மறவாது கண்மணியே..
கபடமில்ல உன் எழில் முகத்தை
காணும்போது என் மனம் குதூகலிக்கிறது தேன்மொழியே..
சொல்லிவிடும் வரையில் நான்
தினந்தோறும் துடித்தேனே..
சொன்ன பின்பு களிப்பாலே
வானத்தில் பறந்தேனே..
என்னவளே..
என்னுயிரில் கலந்து நீ இருப்பதாலே...
என்னுயிரை முன்னைவிட அதிகம்

நேசிக்கிறேன் என்னுயிரே...

No comments:

Post a Comment